காதலன் விழாவிற்கே நயன்தாரா வராததன் காரணம் இது தான்

நயன்தாரா கால்ஷிட் எப்போது கிடைக்கும் என பலரும் வெயிட்டிங். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது ஊர் அறிந்த விஷயம்.

இந்நிலையில் இவர் அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்தது, பலரும் நயன்தாரா வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் கடைசி வரை வரவில்லை, என்ன என்று விசாரிககியில் தன் படத்தின் ப்ரோமோஷனுக்கே நயன்தாரா வருவதில்லை, இதற்கு வந்தால் எல்லோரும் தவறாக பேசுவார்கள் என்று வரவில்லையாம்.