நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அவர் விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,
இதன் போது அவர்,
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விட அனுமதிப்பத்திரத்துடன் நான் கொண்டு வந்த வாகனம் தான் பாரிய ஊழலா?
தற்போது விசாரணைகளுக்காக செல்கின்றேன். வந்து மிகுதி கருத்தை கூறுகின்றேன். ஒரு வேளை என்னை கைது செய்தால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கின்றேன்.
மேலும், 125 பில்லியன் ரூபா மோசடி செய்த அர்ஜூன் மகேந்திரனை விட்டுவிட்டு வாகன கொள்வனவிற்காக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
என்னை கைது செய்தாலும் செய்யலாம். அவ்வாறு கைது செய்தால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கின்றேன் என கூறி விசாரணைகளுக்காக நாமல் சென்றுள்ளார்.
குறித்த விசாரணைகளுக்காக நாமல் தனியாகவே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.