பொலிஸ் மா அதிபர் இந்தோனேசியாவிற்கு விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ள 65ம் சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு இந்தோனேசியா விஜயம் செய்துள்ளார்.

இந்த மாநாட்டில் 190 நாடுகளைச்சேர்ந்த பொலிஸ் மா அதிபர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று முதல் எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.