கணவருடன் உடலுறவு கொள்ள மகளை வற்புறுத்திய தாய்: மகள் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தாயின் இரண்டாவது கணவரையும், தாயையும் சுட்டுக் கொன்ற மகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரத்தைச் சேர்ந்தவர் அஸ்லிமார்டின்சன் (18). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய தாய் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அவ்வப்போது இருவரும் உல்லாசாமாக இருந்து வந்த நிலையில், அஸ்லியின் தாய் அவரை அவருடைய இரண்டாவது கணவருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக அஸ்லி பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இருவரும் அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் துன்புறுத்தல்கள் அளவுக்கு மீறி சென்றதால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த தூப்பாக்கியை எடுத்து இருவரையும் சுமார் 30 முறை சுட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

சம்பவத்தை அறிந்த போலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்திரவிட்டுள்ளது.

இது குறித்து அஸ்லி கூறுகையில், சிறைக்கு வந்ததைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.