எனக்கு பெற்றோர் இல்லாத குறையை தீர்த்து வைத்தவர் இவர்தான்: கௌதமி உருக்கம்

கடந்த 13 வருடங்களாக கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகை கௌதமி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்தார்,

தனது மகளுக்கு ஒரு பொறுப்பான தாயாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவினை எடுத்தேன் என அறிவித்தார்.

இந்நிலையில், தனது வாழ்க்கையில் தான் முதல் அடி எடுத்து வைத்ததே தனது அண்ணணை பார்த்துதான் எனக்கூறியுள்ளார்.

சிறுவயதில் நடைபழக முயற்சிக்கும்போது தனது கால்களை எட்டெடுத்து வைக்கும்போது தனது அண்ணணே எதிரில் நிற்பாரம், அவரை நோக்கியே தனது கைகளையும் நீட்டிக்கொண்டு நடந்து பழகினேன்.

எனக்கு பெற்றோர் இல்லாத குறையை தீர்த்து வைத்தவர். இன்று வரை எனது வாழ்நாளில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார் என உருக்கமாக கூறியுள்ளார்.