கதவை மூடிக்கொண்டு கண்ணீர் விட்ட கமல்- பிறந்தநாளில் உருக்கமான பதில்

கமல்ஹாசன் மிகவும் தைரியமானவர். ஆனால், ஒரு சில நாட்களாக அவரை சுற்றி கஷ்டங்களே இருந்து வருகின்றது.

ஏற்கனவே காலில் அடிப்பட்டது போதது என்று கௌதமியின் பிரிவு, மனதிலும் வலியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் கமல் தன் பிறந்தநாள் அன்று கொடுத்துள்ள பேட்டியில் ’கால் மிகவும் வலியாக இருக்கின்றது.

அதனால் தான் பிறந்தநாளின் போது கூட ரசிகர்களை சந்திக்கவில்லை, இப்படியே இருக்க மனதிற்கு கஷ்டமாக உள்ளது, விரைவில் எழுந்து நடக்கவுள்ளேன்’ என கூறியுள்ளார்.

மேலும், இது தான் உங்கள் சோகமான பிறந்தநாளா? என கேட்க ‘இல்லை, என் 16 வயதில் எந்த குறிக்கோளும் இல்லாம் இருந்தேன்.

அப்போது என் தந்தை என்னை அழைத்து கடுமையாக திட்டினார், அப்போது கதவை மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதேன், அதுதான் என் சோகமான பிறந்தநாள் என தெரிவித்தார்.