கங்கையில் மிதந்த பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். அதிர்ச்சி தகவல்

பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மனிதர்களுக்கு சிறுசிறு கஷ்டங்களை கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கில் கருப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை கொடுத்துள்ளது.

தங்களிடம் உள்ள கருப்புப்பணத்தை மாற்ற முடியாமல், வெளியே சொல்ல முடியாமல் உள்ள அந்த நபர்கள் செல்லாத கருப்புப்பணத்தை பல வழிகளில் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ அருகே மிர்சாபூர் என்ற பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்தபடி வந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி  காவல் நிலைய அதிகாரிகள் ஆற்றில் மிதந்த கரன்சியை சேகரித்தனர். எவ்வளவு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மிதந்தன என்பது குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.