ஒருவழியாக சிவகார்த்திகேயன் அழுத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது – விபரம் உள்ளே

ரெமோவின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவா அழுது தன்னை மிரட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக மேடையில் கூறினார். இதன் அடிப்படையில் என்ன பிரச்சனையா என்று விசாரித்தபோது சிவகார்த்திகேயன் மீது மூன்று தயாரிப்பாளர்கள், அவர் பணம் வாங்கி விட்டு நடிக்க மறுக்கிறார் என புகார் சொன்னதையடுத்து சங்கம் சார்பில் சிவாவிடம் விசாரணை நடந்தது.

இதில் அவர் 2013ம் வருடம் வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். இதில் நான் ஞானவேல் ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் அப்போது ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கப்பட்டது.

மற்றவர்களின் படங்களில் நடிக்க பணம் ஏதும் வாங்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே சொல்லப்பட்டது. ஆனால் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், சிவகார்த்திகேயனுக்கு நான் அட்வான்ஸ் கொடுத்தது உண்மை என்று கூறியிருந்தார். அது சிவாவோட மனசாட்சிக்குத் தெரியும். நான் பணம் பத்தி பேச ஆரம்பிச்ச காலத்துல இருந்தே என் போனை அவர் எடுக்குறது இல்லை என்றார்.

இந்நிலையில் இந்த பிரச்சனை இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஞானவேல் ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் பிரச்சனை முடிந்து விட்டதாக சொல்லப்பட்டது.

மேலும் மூன்று தயாரிப்பாளருக்கும் படம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் தற்போது அவர் வாங்கும் சம்பள அடிப்படையில் தான். இதற்கு ஞானவேல் ராஜாவும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவில் உள்ளதால் அவர் வந்த பிறகு தான் மற்ற விஷயம் தெரியவரும் என்றனர்.