கவுதமியின் கனவு…கமலுக்கு வேண்டாதவர்கள் போடும் தூபம்…என்ன நடக்கும் இறுதியில்?

கமல் கோலிவுட்டில் பலருக்கு பிடித்தவர். ஆனால், எல்லோருக்கும் பிடித்தவர் இல்லை. கமலும் சரிகாவும் பிரிந்தவுடன், தயாரிப்பாளர் தாணு சரிகாவை மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஒரு தமிழ் படத்திலும் நடிக்க வைத்தார். அது கமலுக்கு தர்மசங்கடமானது.

இப்போ கவுதமி கமலை விட்டு பிரிந்து விட்டார். அவருக்கு ஒரு கனவு இருக்காம். தன் மகள் சுப்பு லட்சுமியை ஹீரோயினாக்க வேண்டும் என்பது தான் அது. அதுவும் எப்படி ? மேனகா எப்படி தன் பெண் கீர்த்தி சுரேஷை கொண்டு வந்தாரோ …அதை போலவே கொண்டு வரவேண்டுமாம்.

இதற்கு தூபம் போட…சிலர் ரெடியாகி உள்ளனர். காலம் தான் பதில் சொல்லணும்…