பிரபல நடிகையின் மரணம் – சடலத்தின் அருகாமையில் இருந்த அதிர்ச்சிகரமான பொருட்கள்

சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை  புலனாய்வு செய்வதற்கு காவற்துறை 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறை சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து அவரது டையரி மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம்  உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா  தம்பதியின் மகள் சபர்ணா. சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின்னர் சினிமாவில் நடிக்க அவருக்கு  வாய்ப்பு கிடைத்தது.  ‘பிரிவோம்,  பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட  திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார்.

டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன்  நகர், 1வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சபர்ணா  வசித்து வந்தார். சினிமா புள்ளி ஒருவரை சபர்ணா காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது.

சபர்ணா தனது தோழிகளிடம் தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்து விட்டதாக  சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சபர்ணா வசித்து  வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம்  ஏற்பட்டது.

இந்நிலையில், திடீரென வீட்டுக்குள் இருந்து  துர்நாற்றம் வந்ததால் அவர்கள் சந்தேகம் கொண்டு காவற்துறைக்கு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மதுரவாயல் காவற்துறை நிலையத்தில் இருந்து காவற்துறை வந்து  பார்த்த போது ” படுக்கை அறையில் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்  சபர்ணா.

அருகில் அவரது ஆடை கழட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் இருந்ததுள்ளது.

கத்தியால்  கீறியிருந்தது போல் தெரிந்தது. அவராகவே கிழித்து கொண்டதா அல்லது யாரும்  அவரை காயப்படுத்தியதா என தெரியவில்லை.

சபர்ணா இறந்து மூன்று நாட்களுக்கு  மேலாகி இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

தரையில் கொட்டியிருந்த ரத்தம் உலர்ந்திருந்தது. சபர்ணாவின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவற்துறை அனுப்பி  வைத்தனர். இன்று பிற்பகலில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், வீடு முழுவதும் ஆய்வு செய்த கைரேகை நிபுணர்கள்,  அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். சோதனைக்கு மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டது.

மோப்ப நாய் வீட்டில் இருந்து ஆலப்பாக்கம் மெயின் ரோடு  வரை சென்று நின்றுவிட்டது. இதற்கிடையே, சபர்ணாவின் வீடு முழுக்க காவற்துறை  தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து காவற்துறை கூறியதாவது: சபர்ணா வீட்டுக்கு நாங்கள் சென்ற போது, கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. தாளிடாமல் மூடியிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது. நிர்வாணமாக  சபர்ணா பிணமாக கிடந்தார்.  சடலத்துக்கு அருகில் சிறிய கத்தி  எடுக்கப்பட்டுள்ளது, அவற்றை வைத்துதான் மணிக்கட்டை அறுத்து கொண்டாரா  என்றும் விசாரிக்கிறோம்.

கடையில் இருந்து டீ வாங்கி குடித்த 20 கப்புகள்  இருந்தன, அதில் பல கப்புகளில் சிகரெட் துண்டுகள் அணைக்கப்பட்டிருந்தது.

மது வாங்கிக் குடித்துள்ளனர், மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை அங்கு பயன்படுத்தியதற்கான அடையாளங்களும் இருந்தன,

3 நாட்களாக அவருடைய செல்போன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, 3 நாட்கள் முன்பு யாரிடம் பேசினார் என்றும் ஆராய்ந்து  வருகிறோம்.

இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பிரேத பரிசோதனை முடிந்தவுடன்  சபர்ணாவின் உடலை திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர்  கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய அவரது பெற்றோர் முடிவு  செய்துள்ளனர்.