தமன்னாவின் குமுறல்!

‘நல்லாத் தானே போயிட்டிருக்கு; எதற்கு இந்த திடீர் குழப்பம்’ என, வடிவேலு பாணியில் கேட்கிறார் தமன்னா. சமீப காலமாக, தன்னைப் பற்றிய பல்வேறு வதந்திகள், செய்திகளாக பரப்பப்படுவதால், கடும் எரிச்சலில் இருக்கிறார் அவர். சமீபத்தில், தமன்னா, ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதைப் பார்த்த அவர், கோபத்தில் கொந்தளித்து விட்டார். ‘எந்த படத்தில் நடிக்க வேண்டும்; நடிக்கக் கூடாது என்பதை, நான் தான் முடிவு செய்வேன். ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்தால், அதுபற்றிய அறிவிப்பை நானே வெளியிடுவேன். என் இமேஜை கெடுப்பதற்காக, தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம்’ என, டுவிட்டரில் குமுறியுள்ளார் தமன்னா.