கணவரை வெட்டிக் கொன்றது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கள்ளக்காதல் பிரச்சனையால் மனைவி, கணவரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே நடுநாலு மூலைக்கிணறு என்ற புதுகாலனியை சேர்ந்த சங்கிலி மாடன்(வயது 36) என்பவர் கூலிவேலை செய்யும் தொழிலாளி.

இவரின் மனைவி சாந்தி பக்கத்து ஊரைச் சேர்ந்த அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு தினேஷ்(16), முகேஷ்(10), ராஜேஷ்(8) என மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கிலிமாடன் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சாந்தி மீது சந்தேகப்பட்ட பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சாந்தி அளித்த வாக்குமூலத்தில், பிச்சிவிளையை சேர்ந்த முடிசூடும்பெருமாள் என்பவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்து வந்தது, அவருடன் நான் பழகுவதை அறிந்த எனது கணவர் கண்டித்தார்.

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது என் கணவர் என்னை கொலை செய்து விடுவேன் என்று கூறினார்.

அதற்கு பயந்து போய் இரவில் தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினேன் என தெரிவித்துள்ளார்.

கணவரை மனைவியை வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.