அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் விவாகரத்தா? நச் பதிலளித்த நடிகை

ஐஸ்வர்யா ராயும், அவரது கணவருக்குமிடயே கருத்து வேறுபாடு என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ஏ தில் ஹை முஸ்கில்.

இந்த படமானது, வெளியாவதற்கு முன்னேயே படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பீர் கபூருடன் நெருக்கமாக நடித்த காட்சி புகைப்படங்கள் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதனால், ஐஸ்வர்யா ராயுடன் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார், கணவர் ஆகியோர் வருத்தத்தில் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவியது.

இந்நிலையில், வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான சூரிய வழிபாட்டு விழா ‘சாத்பூஜை’ யில் தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

தற்போது, அந்த புகைப்படங்களை இனையத்தில் விட்டு தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதில் கவனமாக இருக்கிறேன். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் என் குடும்பத்துக்குத்தான் முதல் இடம் தருவேன்,யார் என்ன வேண்டுமானலும் பேசட்டும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.