போனில் சைபர் க்ரைம் கும்பல்! திரிஷா கொதிப்பு, நடந்தது என்ன?

நடிகை திரிஷா தமிழ், தெலுங்கில் பிரபலமானவர். அனைத்து டாப் ஸ்டார் நடிகர்களோடு நடித்து விட்டார். விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் ரசிகர்களோடு அவ்வப்போது உரையாடலில் வருவார்.

அப்படி பேசிக்கொள்ளும் இவர் அவர்களின் கேள்விக்கு மட்டுமில்லாது, சமூகத்தில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்து கருத்து சொல்கிறார்.

சமீபத்தில் சில வலைதள திருட்டு கும்பல் அவருடைய செல்போன் மூலம் ஊடுருவி தகவல்களை திருட முயற்சித்திருக்கிறார்கள்.

இதனால் கொதித்த திரிஷா சில வேலையற்ற கோழைகள் யாரோ என் மொபைலை HACK செய்திருக்கிறார்கள். எனவே போனில் வைத்திருந்த தகவல்களை எல்லாம் அழித்து விட்டேன்.

என்னுடைய நம்பர் வைத்திருக்கும் நண்பர்கள் உங்க பெயரை எனக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் கூறியுள்ளார்.