மகளை மருமகனிடம் இருந்து பிரித்த தாயார்: மருமகன் எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மாமியார் மறுத்ததால், மருமகன் அரிவாளால் மாமியாரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பொன்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இளநீர் வியாபாரியான இவர் இளநீர் விற்று வந்து தான் குடும்பத்தை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறியதாய் சென்ற இந்த தகராறு நாளைடைவில் பெரிதாக மாறியுள்ளது. இதனால் சரஸ்வதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தன் மனைவியின் பிரிவை தாங்க முடியாத குமார், மனைவியை அழைத்து வருவதற்காக, மாமியார் வீட்டிற்கு சென்றுள்ள்ளார். அங்கு சென்ற குமார் மனைவியை தன்னுடன் அனுப்பக் கோரி மாமியார் கவுரம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் உன்னுடன் எனது மகளை இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று மாமியார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அரிவாளை எடுத்து கவுரம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பொலிசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.