35000 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பிடல் காஸ்ட்ரோ: வெளியான அதிர்ச்சி தகவல்!

கியூபா நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார்.

காஸ்ட்ரோ இறந்ததைத் தொடர்ந்து சுமார் 9 நாட்கள் கியூபா நாட்டில் துக்க நாளாக அனுசரித்து வருகின்றன.

பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர், தன்னம்பிக்கை மிகுந்த மனிதர், உலகில் பலருக்கும் முன்னுதாரமானவர் என பலரும் கூறிவந்த நிலையில், அவர் 35,000 ஆயிரம் பெண்களுடன் தன்னுடைய படுக்கை அறையை பகிர்ந்துள்ளார் என்பது தொடர்பான செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் ஒரு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய 82 வயது வரை 35,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல Documentry இயக்குனரான Ian Halperin பிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் அதிகாரியான Ramon உடன் நடத்திய நேர்காணலின் போது அவர் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் பிடல் காஸ்ட்ரோ நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார் என்றும், அதில் காலை ஒன்று மாலை ஒன்று என பிரித்துக் கொள்வார் என கூறியுள்ளார்.

ஒரு சில நேரங்களில் காலை வேளைகளிலே பெண்களுடன் ஒன்றாக இருப்பார் எனவும் கூறியுள்ளார். இதை அவர் காலை உணவுக்கு முன்னர், இரவு உணவுக்கு பின்னர் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இது எல்லாம் அவருடைய 40 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கியூபா நாட்டின் ஜனாதிபதி, புரட்சியாளர், அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த வீரர் என இளைஞர்கள் பலரும் இவரை முன்னுதாரணமாக கூறி வரும் நிலையில், இவர் தொடர்பான இந்த புதிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.kasto-girls