ஹெரோயின் போதைப் பொருளுடன் 18 வயதான யுவதி கைது

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு கொம்பனித்தெரு, டோசன் பிரதேசத்தில் இன்று இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித் தெரு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியிடம் இருந்து 5.30 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொம்பனித் தெரு பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இந்த யுவதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.