உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (திங்கள் கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடம் :
தனியார் நிறுவங்கள் திடீர் விடுமுறை முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடம் : தனியார் நிறுவங்கள் திடீர் விடுமுறை
ஜெயலலிதா காலமான செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகத்தில் 7 வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.