நடிகை கௌதமியின் உருவப்படத்தை எரித்த அதிமுகவினர்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை கௌதமியின் உருவப்படத்தை அதிமுகவினர் எரித்துள்ளனர்.

திருச்சியில் நேற்று கெவுதமியின் உருவப்படத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர். மேலும் கௌதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.

எனவே அவருடைய மறைவை நடிகை கௌதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.