சென்னையிலிருந்து வருகை தந்த இரண்டு விமானங்கள் இன்று(13) காலை தாமதமாகவே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது என விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
வர்தா சூறாவளி காரணமாகவே விமானம் தாமதமாக வருகை தந்துள்ளது.
இந்த விமானப் பயணங்கள் தொடர்பில் தெளிவாக தெரிந்துக்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தின் அனுமதிக்கா காத்திருப்பதாக குறித்த முகாமையாளர் அறிவித்துள்ளார்.
மோசமான காலநிலை காரணமாக சென்னை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களுக்கிடையிலான விமானங்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
நேற்று(12) மாலை 17.30 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் 274 தற்போதும் விமான நிலையத்திலேயே இருப்பதாகவும், இன்று(13) காலை சென்னை புறப்படவிருந்த UL129 என்ற ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமும் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையில் பயணம் செய்யும் 4 விமானங்கள் நேற்றைய தினம் தாமதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.