தனது வீட்டில் குவிந்த தொண்டர்கள் முன்னிலையில் பேசிய தீபா, சசிகலா எந்த தொகுதியில் நின்றாலும் அவரை நான் தோற்கடிப்பேன் என கூறியுள்ளார்.
தனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும்.
அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது, ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.
அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன், சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும், அவர்களும் என்னை ஆதரிப்பார்கள், பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன்.
அதிகாரத்திற்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.