முதல்வர் பதவிக்காக கட்சியினரை தூண்டிவிடுவது நல்லதல்ல! சசிகலாவை சீண்டிய ஓ.பி.எஸ்

அதிமுகவின் பொது செயலாளராகி விட்ட சசிகலா அடுத்து தமிழக முதல்வராக காய் நகர்த்தி வருகிறார்.

தற்போது தனது பணிகளை வேகமாக செய்து வரும் முதல்வர் ஓ.பி.எஸ்க்கு சசிகலா தரப்பினரின் தூண்டுதலின் பேரில் பல அமைச்சர்கள் ஓ.பி.எஸ் பதவி இறங்க வேண்டும் என அறிக்கை விடுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

என்றைக்கும் நான் பதவியை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்ததும் இல்லை, தேடிப் போனது இல்லை. பதவி எல்லா நேரங்களிலும் என்னைத் தேடித்தான் வந்திருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களுக்காக பாடுபட வேண்டும் என உழைக்கிறேன் என அவர் அமைச்சர்களிடம் சீறினாராம்.

மேலும், நான் பதவி விலக வேண்டும் என என்னிடம் நேரடியாக சொல்லாமல் பிறரை தூண்டி விடுவது நல்லதல்ல என ஓ.பி.எஸ் கூறியதாக தெரிகிறது.

இதெல்லாம் சசிகலாவுக்கு தெரிந்தும் ஓ.பி.எஸ் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என அவர் காத்திருக்கிறார் என கூறப்படுகிறது.