நடிகை நமீதாவை மிரட்டிய வீட்டு உரிமையாளர்!

நடிகை நமீதா தான் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் தனக்கு தொந்தரவு அளிக்கிறார் என தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்தில் தெருவில் உள்ள கருப்பையா நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நடிகை நமீதா வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இதில் வீட்டு வாடகை தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நமீதாவை வீட்டை விட்டு காலி செய்ய வைக்கும் முயற்சியில் வீட்டு உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து நமீதா பொலிசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், அவசர வழக்கு ஒன்றினை அவர் தாக்கல் செய்தார்.

அதில், நான் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதற்காக வீட்டு உரிமையாளர் ரவுடிகளை வைத்து என்னை மிரட்டுகிறார். அமைதியான முறையில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது.

எனவே எந்த வகையிலும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டு உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.