சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் 5 ஆயிரம் வெற்றிடங்கள்! எஸ்.பி

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாகவும் அமைச்சர்கூறியுள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கஇதனைத் தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்புத் தொடர்பான ஜனாதிபதியின் இலக்குகளை நிறைவேற்றும் நடைமுறையில் சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சிடம் அதிகளவிலான பொறுப்புஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமுர்த்தியின் மூலம் வங்கி வலைப்பின்னலும், சமூக பாதுகாப்பு இயக்கமும் வீடமைப்புஅபிவிருத்தித் திட்டமும் சிறப்பான முறையில் கட்டியெழுப்பப்பட்டன என அமைச்சர்எஸ்.பி. தெரிவித்துள்ளார்.