தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில், நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த நாளும் இன்ப மயமாக வாழலாம். வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். 27.1.2017 (வெள்ளிக்கிழமை) அன்று தை அமாவாசை வருகிறது. அன்றைய தினம்தான் அபிராமிபட்டர், முழு நிலவை வரவழைத்தத் திருநாள். நடக்காததை நடத்திக் காட்டக்கூடிய நாள் அது.
மேலும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலைக் குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாத்துவதன் மூலம், அவள் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள்.