யாழில் போராட்டங்கள் வெடிக்கும்..! சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழியில் அமைத்து கொடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களை தவிர சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டால் யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட த்தில் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில்,

அவ்வாறு நாவற்குழியில் அமைக்கப்படும் 200 வீடுகள் கொண்ட மாதிரி கிராமத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அதனை விடுத்து சிங்கள மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களை அங்கே குடியேற்றினால் இங்கே பலத்த போராட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் வீடமைப்பு அதிகார சபைக்கு எதிராகவும் நாம் முன்னெடுப்பதற்கு எடுத்துளோம்.

அதுமட்டுமல்லாமல் யாழ். வைத்தியசாலையில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு பேரூந்து நிலையத்தினை அண்டிய பகுதிகள் சில சுவீகரிக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளரினால் யாழ்போதனா வைத்தியசாலையின் தலைமை அதிகாரிக்கு கடிதம் வழங்கியுள்ளார்.

அவ்வாறு வைத்தியசாலை நிர்வாகம் செயற்பட்டால் அதற்கு எதிராகவும் நாம் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

வைத்தியசாலை அமைப்பதற்கு போதியளவு காணி தீவகப்பகுதிகள் மற்றும் பலாலி வீதிகளை அண்டிய பகுதிகளில் தாராளமாகக் காணப்படுகின்றன.

அதனை விட்டுவிட்டு நீண்டகாலமாக ஒற்றுமையாக வாழும் யாழ் குடாநாட்டின் நகரப்பகுதிகளில் காணிகளை அபகரித்து வைத்தியசாலைக்கட்டடங்கள் அமையுமானால் யாழ்ப்பாணத்துக்கு எந்த ஒரு தென்னிலங்கை அரசின் பிரதிநிதிகள் எவரும் தமிழ் மக்கள் வசிக்கும் மண்ணில் காலடி வைக்கமுடியாது என தெரிவித்தார்.