சிறைகளில் அடைத்து எமது போராட்டங்களை தடுக்க முடியாது!

எமது போராட்டகளை சிறையில் அடைத்து தடுக்க முடியாது என முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபகடஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வீரவன்சவை சிறையில் அடைத்து போராட்டங்களை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

வீரவன்ச இப்போது இருக்கும் சிறைக் கூடத்தில் 40 வருடங்களுக்கு முன்னர் நான் இருந்திருக்கின்றேன்.

நாமலும் இருந்துள்ளார். சிறைகளில் அடைத்து போராட்டங்களை தடுக்க முடியாது. என மகிந்த தெரிவித்துள்ளார்.