தமிழர்களை இழிவுப்படுத்திய ராதா ராஜனுக்கும் பீட்டாவுக்கும் சம்மந்தமே கிடையாதாம்! அதிர்ச்சி உண்மை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்று வந்த போது ராதா ராஜன் என்ற பெண்மணி மிக பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது, சென்னை மெரினாவில் போராட்டத்துக்காக கூடிய லட்சகணக்கான மக்களை இழிவுப்படுத்தும் வகையில், ஃப்ரிசெக்ஸ் என்று சொன்னால் கூட மெரினாவில் இவ்வளவு பேர் கூடுவார்கள் என அசிங்கமாக பேசி இருந்தார்.

பின்னர் எழுந்த எதிர்ப்பால் மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில் பீட்டா அமைப்பின் உறுப்பினர் என கூறப்பட்டு வந்த ராதா ராஜனுக்கும் பீட்டாவுக்கும் சம்மந்தமே இல்லை என்ற அதிர்ச்சி விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து பீட்டா இந்தியாவின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா தற்போது கூறுகையில், ராதா ராஜன் என்பவர் பீட்டாவில் உறுப்பினரும் இல்லை அதில் பணிபுரியவும் இல்லை.

அவர் இதில் உறுப்பினர் என்பது யாரோ கூறிய தவறான தகவல் என பூர்வா கூறியுள்ளார்.