கான்பூரில் இன்று தொடங்குகிறது இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி-20 ஆட்டம்!

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நவம்பர்- டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இருந்தது.
அடுத்து இரு அணிகள் இடையே 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கான்பூரில் இன்று தொடங்குகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வீரர்கள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ராகுல், மனிஷ் பாண்டே, யுவராஜ்சிங், டோனி, ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெக்ரா, பர்வேஷ், பும்ரா, மன்தீப்சிங், ரிஷப் பண்ட், யசுவேந்திரஷால்.
இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன்அலி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜேக்பால், டாசன், கிறிஸ் ஜோர்டான், புளுன்செட், மில்ஸ், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி.