பிரபாகரனின் கொலைப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் விமல் வீரவங்ச! உயிருக்கு அச்சுறுத்தலா?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொலைப்பட்டியலில் விமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் பிரபாகரனுக்கு விமலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பிரபாகரனின் கொலைப்பட்டியலில் விமல் உள்ளாரா? அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர்,

பிரபாகரனின் கொலைப்பட்டியலில் விமல் வீரவங்ச மூன்றாம் இடத்தில் இருப்பதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் பிரபாகரனுக்கு விமலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.

அவருடைய உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், விமலின் கட்சியினர் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.