அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனை தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழமையாக 20 முதல் 25-ம் திகதிகளிலேயே சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இரண்டு பிரிவுகளாக பிரித்து 5 முதல் 10-ம் திகதி வரை ஒரு பிரிவாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தால் அது பிரச்சினைகளுக்கு உரிய விடயமாக அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.