இலங்கையுடன் அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் விருப்பம் கொண்டுள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மக்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கும் எதிர் பார்த்துள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மைத்திரிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு பாதை ஒரு அணைத் திட்டத்தின் உருவாக்கத்தில், இலங்கை பங்களிப்பதற்கும் தாம் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து ஆரோக்கியமான, சுமுகமான இருதரப்பு உறவுகள் நீடித்து வந்திருக்கின்றன” என்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.