கட்டுநாயக்கவில் மூவர் அதிரடி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளுடன் லிதுவேனியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதைப்பொருளை பொறுப்பேற்க வந்த நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசில் , லிதுவேனியா , இந்தியா , நைஜீரியா மற்றும் இலங்கையை தொடர்பு படுத்தி இந்த போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.