முல்லைத்தீவு – கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் 18 ஆவது நாளாக எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருகிறது என யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டத்திற்கு தீர்வை பெற இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் பேசப்பட்டு சரியான முடிவு ஒன்றிணை பெற்றதர வலியுறுத்தும்
அத்துடன் விமான படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி விடுவிக்கப்பட வேண்டு என இந்த மக்கள் 18 நாட்களாக அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றதுடன் புதுக்குடியிருப்பு மக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 19 ஏக்கர் காணி விடுவிக்கப்பட கோரி 14 நாட்களாக போராடி வருகின்றனர்.
தங்களது சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இந்த மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லா வகையிலும் நீதியானதும் நியாயமானதாகும்.
கடந்த 30 ஆண்டு கால கொடிய போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் நல்லாட்சி அரசாங்கம் தாமாகவே செய்திருக்க வேண்டிய ஒரு பணியை மக்கள் போராட்டம் நடத்தி 18 நாட்களாகியும் அரசாங்கம் எந்தக் கவனமும் இன்றி இருப்பது கண்டிக்க தக்கது.
இதற்கான தீர்வினைக் காண்பது தலைபோகிற காரியமல்ல. நல்லாட்சி அரசாங்கம் உடனடியாகவே இந்த பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும்.
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசாங்கத்துக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.
மேலும், எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் கூடவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில், இது பற்றி விரிவாகப் பேசி தீர்வு ஒன்றினை அடைய வலியுறுத்துவோம் என யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.