“இந்த மண் எங்களின் சொந்த மண்” பாடகர் சாந்தன் மறைந்த சோகத்தில் முல்லைத்தீவு

தாயகத்தின் பிரபல பாடகர் சாந்தனின் மரணம் தொடர்பிலான அதிகாரப் பூர்வ தகவலை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியசீலன் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் அறிவித்திருந்தார்.

இதேவேளை காணி உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மக்கள் இவரது மரணம் தொடர்பிலான தகவலறிந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறியார் வந்தவன்! நீர்வளமும் உண்டு! நில வளமும் உண்டு! நின்மதி ஒன்றுதான் இல்லை” என்னும் பாடல் ஊடாக புகழ்பெற்றவர் பாடகர் S.G.சாந்தன்.

குறித்த கலைஞனின் மரணமானது முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது.

பாடகர் சாந்தனின் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே’ என்கிற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பக்திப்பாடல் சிவரத்திரி தினத்தன்று ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஒளிக்கவிடப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.