மஹிந்த குழுவின் அரசாங்கத்தில் பொறுப்புக்களைச் சுமக்க மாட்டேன்!

மஹிந்த சார்பு குழுவின் அரசாங்கம் அமைந்தால், அதில் தான் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவயில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துவரும் எந்தவொரு அரசாங்கத்திலும், நான் பொறுப்புக்களை ஏற்க மாட்டேன்.

இருப்பினும், மக்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்குவேன். நான் எப்போதும் மக்களுடன் இருக்கின்றேன் எனவும் அவர் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளார்.