ரணிலை நம்பி ஏமாந்தேன்!

தனது கணவர் குறித்து எந்த தீர்வும் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த அரசாங்கமும் எந்த தீர்வையும் பெற்று தரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு தன்னுடைய சாட்சியங்களை அவர் பதிவு செய்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவருடன் இணைந்து தேர்தலில் பிரச்சாரங்களை முன்னெடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எனது கணவரின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.