விமல் சுயாதீனமாக செயல்படலாம்! கட்சியாக செயல்பட முடியாது!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் தனிக்கட்சியாக அங்கீகரிக்க  முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய  பாராளுமன்றத்தில்  இன்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் மற்றும் பாராளுமன்ற நியதி சட்டங்கள் அடிப்படையில் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரை தனிக் கட்சியாக அங்கீகரிக்க  முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.