சிகரட் பாவனையாளர்களுக்கு மிக பெரிய ஆப்பு தயார்!

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஒற்றை சிகரட் விற்பனை செய்ய முடியாத வகையில் சட்ட விதிகளை உருக்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெறுவதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புளத்சிங்கள ரெட்டியல பாடசாலையில் இடம்பெறும் மருத்துவ முகாமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலத்தில் புகை பொருட்கள் வரியை நூற்றுக்கு 90 சதவிகிதம் அதிகரிப்பதற்கும், விளம்பரப்படுத்தல் மேற்கொள்ளாத வகையில் தனி வெள்ளை நிறமான சிகரட் பைக்கட்டினை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.