பாதாள உலக குழுக்கள் மீது இரக்கம் காட்டாமல் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
புளுமெண்டல் பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் பாதாள உலகத்தினர் தற்போதைய அரசாங்கத்தின் உதவியுடன் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மைக் காலங்களில் பாதாள உலகத்தினரது செயற்பாடுகளால் நாட்டினது பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதுடன், பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.