அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன்: தினகரன் தகவல்

தமிழகத்தின் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளும் கை கோர்த்து, நீங்கள் அரசியலை விட்டு செல்லுங்கள் என கூறினால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சிறைக்கு செல்லும் முன் டிடிவி தினகரனை திமுகவின் துணை பொதுச்செயலராக நியமித்தார். அதன் பின்னர் தினகரன் கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து கட்சி மற்றும் ஆட்சி என இரண்டையும் கைப்பற்றுவதில் தீவிரமாய் செயல்பட்டு வருகிறார் தினகரன்.

இதன் காரணமாகவே அவர் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றால் அடுத்து முதல்வர் பதவி தான், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியை விட்டுத்தர வேண்டும் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு ஒப்புகொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரன், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளும் கை கோர்த்து, நீங்கள் அரசியலை விட்டு செல்லுங்கள் என கூறினால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.