89 கோடி பட்டுவாடா: வருமான வரி சோதனையில் சிக்க போகும் 12 அமைச்சர்கள்?

அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் 12 பேர் வருமான வரி சோதனையில் சிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சிக்கியது.

இச்சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக அமைச்சர்கள் 12 பேர் வருமான வரி துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரையும் வருமான வரித்துறையினர் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் பீதியில் உள்ளனர்.