மட்டுவில் பகுதியில் கிணற்றில் விழுந்து குடும்ப பெண் மரணம்.

சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் வீட்டுக்கிணற்றில் விழுந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று 11:30 மணியளவில் நடந்த இச் சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த திருமதி பராசக்தி நடேசு வயது 52 என்பவர் மரணமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக் கப்படடுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.