முள்ளிவாய்க்காலில் மண்டை ஓடுகளும் கால் எலும்புத் துண்டுகளும்..

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது ஈழத்தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்றதாக பலதரப்பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை யாவரும் அறிந்த விடயமே.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் கூட, அந்த கசப்பான அனுபவங்களை நினைவுபடுத்தும் பல பொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் யுத்தம் நடைபெற்ற இடத்தில் இன்றுவரை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிறுவர்களின் மண்டைஓட்டுப்பகுதிகள், கால் எலும்புத் துண்டுகள் போன்ற மனித எச்சங்கள் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மனித எச்சங்களுக்கு அருகில் பொதுமக்களின் சேதமாக்கப்பட்ட உடைமைகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.