கட்சி மற்றும் ஆட்சியை யாரும் கைபற்ற முடியாது என ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடையே பேசுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக-வுக்கு பல்வேறு சோதனைகள் சந்தித்துள்ளது.
அந்த சோதனைகளை தொண்டர்கள் தவிடு பொடியாக்கி கட்சியை வளர்த்தார்கள்.
தற்போது சிலர் கட்சியை முடக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது என கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும், கட்சியையும் யாரும் கைப்பற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நமது அணியில் தான் கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் உள்ளனர்.
123 எம்.எல்.ஏக்கள் மற்றும் 29 எம்.பிக்கள் ஆதரவு நமக்கு தான் உள்ளது.
கட்சி சிதைந்து விட கூடாது என்பதற்காக தான் ஓ.பி.எஸ் அணியுடன் இணைய சம்மதித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியையும், கட்சியையும் யாரும் கைப்பற்ற முடியாது என முதல்வர் கூறியுள்ளது ஓ.பி.எஸ் அணிக்கு மறைமுகமாக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.