வெசாக் அலங்காரத்தால் பௌத்த நகராகிய வவுனியா!

சர்வதேச வெசாக் உற்சவத்தை கொண்டாடும் முகமாக இலங்கை விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தென்னிலங்கை மட்டுமன்றி வடபகுதியிலும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா நகரம் வெசாக் கூடுகளாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பெருமளவான மக்கள் வெசாக் நிகழ்வுகளை வருகை தந்து பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.