தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் நதீ ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை பெய்யும் போது ஏற்படும் மின்னல் ஆபத்துக்களில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.