வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் விவசாய பாடம் கற்பிக்கும் ஆசிரியர் கடந்த 22 ஆம் திகதியன்று பாடசாலையின் புத்தக அறை ஒன்றில் வைத்து பதினைந்து வயதுடைய மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா வலயக்கல்விப் பணிமனை முன்னெடுத்துள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக குறித்த மாணவி சம்பந்தப்பட்டவர்கள் ஆசிரியர் தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

குறிப்பிட்ட ஆசிரியரின் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு இன்று) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.