நாசரை நெகிழவைத்த விஜய்

கடந்த 2014-ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் நடிகர் நாசரின் மகன் பைசல் சிக்கி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், விஜய் சமீபத்தில் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். விஜய் தனது மகனை சந்திக்க வந்துள்ளது நாசரை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதை தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பில் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய்யும் நாசரும் இணைந்து ‘பிரியமுடன்’, ‘தமிழன்’, ‘வசீகரா’, ‘சுக்ரன்’, ’ஆதி’, ‘தலைவா’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.