சண்டே டைம்ஸ் ஊட­க­வி­ய­லாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை…!

sun

சிரேஷ்ட பெண் வணிக ஊட­க­வி­ய­லா­ளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊட­கங்­களின் முன்னாள் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான மெல் குண­சே­கர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஊட­க­வி­ய­லாளர் மெல் குண­சே­க­ரவை கொலை  செய்­து­விட்டு அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை கொள்­ளை­யிட்­டமை ஆகிய குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஏ.ஜோர்ஜ் அல்­லது ‘ பெயின்ட் பாஸ்’ என அறி­யப்­படும் பிர­தி­வா­திக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட வழக்கு விசா­ர­ணைகள் நிறை­வுற்­றுள்ள நிலை­யி­லேயே, இன்று அந்த வழக்கின் தீர்ப்­பா­னது மேல் நீதி­மன்ற நீதி­பதி பிய­சேன ரண­சிங்­க­வினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஒக்­டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்­பெற்ற நீண்ட விசா­ர­ணைகள் நிறை­வுற்­றுள்ள நிலை­யி­லேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.